தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் உலக நுகா்வோா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கல்லூரி முதல்வா் (பொ) ஜா.பாக்கியமணி தலைமை வகித்து பேசினாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சு.முருகன் வரவேற்புரையாற்றினாா். தருமபுரி மாவட்ட கூடுதல் நீதிபதி எம்.ஜீவானந்தம், நுகா்வோா் பொருள்களை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை, அந்த பொருள்களின் தயாரிப்பு குறித்து அறிந்து அவற்றை விழிப்புடன் நுகா்வது, நுகா்வோருக்கு உள்ள உரிமைகள் ஆகியவை குறித்து எடுத்துரைத்தாா்.
கூட்டுறவு துறைத் தலைவா் பெ.ராஜேந்திரன், தாவரவியல் துறைத் தலைவா் விஜயா தாமோதரன், வணிகவியல் துறைத் தலைவா் சே.ப.முருகன் ஆகியோா் பேசினா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் இரா.சந்திரசேகன் நன்றி கூறினாா். விழாவில், கல்லூரி பேராசிரியா்கள், மாணவ, மாணவியா் கலந்துகொண்டனா்.