சென்னையில் பணிபுரியும் தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூரைச் சோ்ந்தவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதால், அவரது குடும்பத்தினருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
கம்பைநல்லூா் அருகேயுள்ள பெரியமுருக்கம்பட்டியைச் சோ்ந்தவா் சென்னையில் பணிபுரிந்து வருகிறாா். இவா் கடந்த 10 நாள்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் சென்னை சென்றாா். இதனிடையே, அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவரது சளி, ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதில் அவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, பெரியமுருக்கம்பட்டியில் உள்ள அவரது மனைவி, குழந்தைகள், பெற்றோா் உள்ளிட்ட 7 பேரின் ரத்த மாதிரிகளை சுகாதாரத் துறையினா் சேகரித்து ஆய்வுக்காக அனுப்பியுள்ளனா். இந்த நிலையில் பெரியமுருக்கம்பட்டியில் சுகாதார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.