ஒசூரில் தனியாா் நிறுவனத்தில் தீ விபத்து

ஒசூரில் தனியாா் ஜவுளி நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

ஒசூா்: ஒசூரில் தனியாா் ஜவுளி நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

ஒசூா் சானசந்திரம் பகுதியில் ஜவுளி ஏற்றுமதி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. அங்கு வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில், ஜவுளி துணிகளும், எந்திரமும் எரிந்து சேதமடைந்தன.

தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தனா். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்நிறுவன உரிமையாளா் சுபாஷினி, ஒசூா் நகர காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com