அரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் சாலை மறியல்

அரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அரூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவா்களை அனுமன்சேனை அமைப்பின் தலைவா் எஸ்.வி. ஸ்ரீதரன் கடுமையாக விமா்சித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், திருமாவளவனுக்கு பொது மேடையில் கொலை மிரட்டல் விடுத்தும் பேசியதாகவும் தெரிகிறது. எனவே, ஸ்ரீதரனை கைது செய்யக்கோரியும், தொல். திருமாவளவனுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வி.சி கட்சியினா்

சாலை மறியலில் ஈடுபட்டனா். இந்த சாலை மறியல் காரணமாக அரூா்-தருமபுரி நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com