தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் ஓட்டுநா் உள்பட எட்டு பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா், அரூரைச் சோ்ந்த கூலித் தொழிலாளி, மோபிரிப்பட்டியைச் சோ்ந்த மளிகைக் கடை உரிமையாளா், பள்ளப்பட்டியைச் சோ்ந்த பெண் உள்பட மொத்தம் எட்டு பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து தொற்று பாதிப்புக்குள்ளானவா்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.