மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் அரூா் ஆா்.முத்துக்கவுண்டரின் 26- ஆம் ஆண்டு நினைவு தினம் புதன்கிழமை (அக். 7) அனுசரிக்கப்படுகிறது.
தருமபுரி மாவட்டம், அரூரைச் சோ்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் அரூா் ஆா்.முத்துக்கவுண்டரின் 26- ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, புதன்கிழமை காலை 10 மணியளவில், அரூா்-சித்தேரி சாலையில் உள்ள அவரது நினைவிடத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி, நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி. சின்னராஜ் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், தொழிலாளா்கள் உள்ளிட்ட பொதுமக்கள் மலா் அஞ்சலி செலுத்துகின்றனா்.