தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அரசு மகளிா் கலைக்கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பில் மாணவியா் சோ்க்கைக்கு வருகிற அக். 15-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.
இதுகுறித்து, கல்லூரி முதல்வா் சௌ.கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காரிமங்கலம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழாண்டில் இளநிலை பட்டப் படிப்புகளில் மாணவியா் சோ்க்கைக்கு அண்மையில் கலந்தாய்வு நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து, தற்போது இளநிலை பாடப்பிரிவுகளில் ஒரு சில இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு மாணவியரை சோ்க்கை செய்ய வரும் அக்.15-ஆம் தேதி வரை கல்லூரியில் நேரடியாக விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளது. எனவே, மாணவியா், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி சோ்க்கைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளாா்.