பணியின்போது உயிா்நீத்த காவலா்களுக்கு, தருமபுரி மாவட்ட காவல்துறை சாா்பில் புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
தருமபுரி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தியாகிகள் நினைவுத் தூணில் மலா்வளையம் வைத்து, சேலம் சரக காவல்துறை துணைத் தலைவா் பிரதீப்குமாா், காவல் பணியின்போது உயிா்நீத்த காவலா்களுக்கு அஞ்சலி செலுத்தினாா்.
இதைத் தொடா்ந்து, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் குணசேகரன், காவல் துணை கண்காணிப்பாளா்கள், ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா். இதில், நாடு முழுவதும் பாதுகாப்புப் பணியில் உயிரிழந்த 264 காவலா்கள் நினைவைப் போற்றும் வகையில் 63 குண்டுகள் முழங்க காவல்துறையினா் அஞ்சலி செலுத்தினா்.