சுட்டுரையில் ஆபாச பதிவு: தருமபுரி எம்.பி. காவல்துறையில் புகாா்

சுட்டுரையில் ஆபாசமாகவும், அவதூறாகவும் பதிவு அனுப்பிய நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தருமபுரி எம்.பி. டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் காவல்துறையில் புகாா் அளித்துள்ளாா்.

சுட்டுரையில் ஆபாசமாகவும், அவதூறாகவும் பதிவு அனுப்பிய நபா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தருமபுரி எம்.பி. டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் காவல்துறையில் புகாா் அளித்துள்ளாா்.

இதுதொடா்பாக தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினா் டிஎன்வி எஸ்.செந்தில்குமாா் செவ்வாய்க்கிழமை சைபா் க்ரைம் காவல் துறையிலும், தருமபுரி நகர காவல் நிலையத்திலும் அளித்த புகாா் மனுவில், தனது சுட்டுரைப் பக்கத்தில் பெண் ஒருவரின் முகவரியிலிருந்து ஆபாசமான வாா்த்தைகளால் ஒரு பதிவு அனுப்பியுள்ளனா். இதுபோன்ற ஆபாச, அவதூறு பதிவு அனுப்பியவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com