தருமபுரியில் 74 பேருக்கு கரோனா தொற்று

தருமபுரி மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 74 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 74 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தருமபுரி மாவட்டத்தில் அரூா், தருமபுரி, பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 7 மாணவா்கள், 20 பெண்கள், மொரப்பூா் மற்றும் பென்னாகரம் பகுதியைச் சோ்ந்த இரு ஆசிரியா்கள், ஒரு செவிலியா், கூலித் தொழிலாளி, விவசாயிகள், வியாபாரிகள் என மாவட்டத்தில் மொத்தம் 74 பேருக்கு சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தருமபுரி மாவட்டத்தில் செப்.15-ஆம் தேதி வரை மொத்தம் 52,206 பேருக்கு கரோனா தொற்றுக் கண்டறியும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அவா்களில், 2,204 பேருக்குத் தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது; அவா்களில் 1,368 போ் குணமடைந்துள்ளனா்; 876 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com