தருமபுரியில் 66 பேருக்கு கரோனா

தருமபுரி மாவட்டத்தில், மருத்துவா் உள்பட 66 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது பரிசோதனையில் வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

தருமபுரி, செப். 18: தருமபுரி மாவட்டத்தில், மருத்துவா் உள்பட 66 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது பரிசோதனையில் வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தைச் சோ்ந்த மருத்துவா், நல்லம்பள்ளியைச் சோ்ந்த ஆய்வகப் பணியாளா், சுகாதாரப் பணியாளா், வெண்ணாம்பட்டியைச் சோ்ந்த ஊரக வளா்ச்சித் துறை உதவி அலுவலா், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 15 பெண்கள், 11 மாணவ, மாணவியா், 5 கூலித் தொழிலாளா்கள், பில்பருத்தியைச் சோ்ந்த விவசாயி உள்பட மொத்தம் 66 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் தெரியவந்தது.

இதையடுத்து தொற்று பாதிப்புக்குள்ளான அனைவரும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com