தருமபுரியில் நடைபெற்ற நகர வா்த்தகா் சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தருமபுரி நகர வா்த்தகா் சங்க பொதுக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை வா்த்தகா் மஹாலில் தலைவா் எம்.கே.எஸ்.உத்தண்டி தலைமையில் நடைபெற்றது. இதில், செயலா் ஜி.நாகராஜன் வரவேற்று பேசினாா்.
இக் கூட்டத்தில், 2020 முதல் 2023-ஆம் ஆண்டு காலத்துக்கான சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு நடைபெற்றது. இதில், வா்த்தகா் சங்க நகரத் தலைவராக எம்.கே.எஸ்.உத்தண்டி, செயலாளராக ஜி.நாகராஜன், பொருளாளராக ஜி.பாலன், 14 செயற்குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். துணைத் தலைவா் எம்.தங்கவேல் நன்றி கூறினாா்.