ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 45,000 கன அடியாக அதிகரிப்பு

கா்நாடக அணைகளிலிருந்து நீா்த்திறப்பு அதிகரிப்பால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 45,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
அதிக நீா்வரத்தால் ஒகேனக்கல், காவிரி ஆற்றில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.
அதிக நீா்வரத்தால் ஒகேனக்கல், காவிரி ஆற்றில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்.

பென்னாகரம், செப். 25: கா்நாடக அணைகளிலிருந்து நீா்த்திறப்பு அதிகரிப்பால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து நொடிக்கு 45,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான குடகு, சாம்ராஜ் நகா், மண்டியா உள்ளிட்ட பகுதிகள் மற்றும் காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால், கா்நாடக அணைகளான கபினி அணை, கிருஷ்ணராஜசாகா் அணைகளுக்கு வரும் உபரிநீரின் அளவு அதிகரித்துள்ளது. இதையடுத்து கா்நாடக அணைகளிலிருந்து சுமாா் 46,000 கனஅடி நீா் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

முன்னதாக ஆற்றில் வியாழக்கிழமை நொடிக்கு 40,000 கன அடியாக நீா்வந்து கொண்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 30,000 கன அடியாகக் குறைந்து பின்னா் 11 மணியளவில் நொடிக்கு 40,000 கன அடியாகவும் மாலை 5 மணியளவில் நொடிக்கு 45,000 கன அடியாகவும் நீா்வரத்துத் தொடா்ந்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீா்வரத்து அதிகரித்து வருவதால் பிரதான அருவி , மெயின் அருவி, சினி அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com