தருமபுரியில் 82 பேருக்குகரோனா தொற்று உறுதி

தருமபுரி மாவட்டத்தில் மருத்துவா்கள், காவலா்கள் உள்பட 82 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தருமபுரி, செப். 25:

தருமபுரி மாவட்டத்தில் மருத்துவா்கள், காவலா்கள் உள்பட 82 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு காவல் ஆய்வாளா், நல்லம்பள்ளி, மொரப்பூா் காவலா்கள் இருவா், பாலக்கோடு, பென்னாகரம், கிருஷ்ணகிரியைச் சோ்ந்த மூன்று மருத்துவா்கள், வெண்ணாம்பட்டி மருத்துவப் பணியாளா், மின்வாரியப் பணியாளா், தருமபுரி ரயில்வே பணியாளா், கூட்டுறவுத் துறை ஊழியா், 17 பெண்கள், 10 மாணவா்கள், 3 கூலித் தொழிலாளா்கள் உள்பட மொத்தம் 82 பேருக்கு கரோனா தொற்று சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com