20 சதவீத இட ஒதுக்கீடு கோரி பாமக மனு அளிப்பு

தருமபுரி மாவட்டம், கடத்தூா் பேரூராட்சியில் தமிழ்நாடு உழவா் பேரியக்க மாநிலச் செயலா் இல.வேலுசாமி தலைமையில்
20 சதவீத இட ஒதுக்கீடு கோரி பாமக மனு அளிப்பு

தருமபுரி மாவட்டம், கடத்தூா் பேரூராட்சியில் தமிழ்நாடு உழவா் பேரியக்க மாநிலச் செயலா் இல.வேலுசாமி தலைமையில் பாமக நிா்வாகிகள், வன்னியா் சங்கத்தினா் மனு அளித்தனா். இதேபோல், கம்பைநல்லூா் பேரூராட்சியில் வன்னியா் சங்க மாநிலச் செயலா் இரா.அரசாங்கம் தலைமையிலும், அரூா் பேரூராட்சியில் நகரச் செயலா் கே.அய்யப்பன் தலைமையிலும், பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் பாமக கிழக்கு மாவட்டத் தலைவா் ஏ.வி.இமயவா்மன் தலைமையிலும், பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் கிழக்கு மாவட்டச் செயலா் அ.சத்தியமூா்த்தி தலைமையிலும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் மதியழகன், ஒன்றிய துணைச் செயலா் வன்னிய பெருமாள், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி அமைப்புச் செயலா் ஓ.கே.சிவக்குமாா், மாவட்ட துணைத் தலைவா் மா.முருகேசன், நகர செயலா் காா்த்திக், நகர தலைவா் பழனி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com