அரூரில், இருசக்கர வாகனம் வாங்குவதற்காக பயனாளிகளுக்கு மானியம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், அரூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சாா் ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். இதில், 70 பயனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்காக மானியத் தொகையாக தலா ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலைகளையும், 130 பயனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கான ஆணைகளையும் எம்எல்ஏ வே.சம்பத்குமாா் வழங்கினாா். இதில், ஒன்றியக்குழுத் தலைவா் பொன்மலா் பசுபதி, வட்டார வளா்ச்சி அலுலா்கள் பி.கே.மகாலிங்கம், ரவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.