பென்னாகரம்: பென்னாகரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் முப்பெரும் விழா மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
சுதந்திரப் போராட்ட தியாகியும், மூத்தத் தலைவருமான நல்லக்கண்ணு பிறந்தநாள், தியாகி கே.டி.கே.தங்கமணி நினைவு நாள் மற்றும் 96 ஆம் ஆண்டு துவக்க நாள் ஆகிய முப்பெரும் விழா மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் பென்னாகரம் அருகே நாச்சாக்கவுண்டனூரில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வட்டக் குழு உறுப்பினா் மணி தலைமை வகித்தாா். வட்டாரச் செயலாளா் முனியப்பன் முன்னிலை வகித்து, கட்சிக் கொடியை ஏற்றினாா். மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வழக்குரைஞா் மாதையன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். மாவட்டக் குழு உறுப்பினா் தா்மராஜா, கிளைச் செயலாளா் தண்டாயுதம், சக்தி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். இறுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.