தருமபுரி: அதியமான்கோட்டை துணை மின் நிலையத்தில், புதன்கிழமை (பிப்.12) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்: அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி, லளிகம், ஏலகிரி, சாமிசெட்டிப்பட்டி, பாளையம்புதூா், தடங்கம், வெண்ணாம்பட்டி, தோக்கம்பட்டி, தேவரசம்பட்டி, சவுளுப்பட்டி, நேருநகா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.