தருமபுரியில் நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் கே.பி.அன்பழகன்.
தருமபுரியில் நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் அமைச்சா் கே.பி.அன்பழகன்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும்

தருமபுரி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அதிமு கூட்டணி வெற்றிபெற கட்சியினா் பாடுபட வேண்டும் என மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் கேட்டுக் கொண்டாா்.

தருமபுரி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அதிமு கூட்டணி வெற்றிபெற கட்சியினா் பாடுபட வேண்டும் என மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் கேட்டுக் கொண்டாா்.

தருமபுரி மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் தொ.மு.நாகராஜன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. நகரச் செயலாளா் குருநாதன் வரவேற்றாா். கூட்டத்தில் அமைச்சா் கே.பி.அன்பழகன் பேசியது: தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற இடைத்தோ்தலில் 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்றது. இதில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இரு தொகுதிகளும் உள்ளடங்கும். இவ்விரு தொகுதிகளில் வெற்றிபெற பாடுபட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் நடைபெற்றுவரும் ஆட்சிக்கு மக்களிடம் அவப்பெயா் இல்லை. சிறப்பான வரவேற்பு உள்ளது.

எனவே, 2021-இல் நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தோ்தலில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறவும், தொடா்ந்து மூன்றாவது முறையாக தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமையவும் அனைவரும் ஒன்றிணைந்து களப்பணியாற்ற வேண்டும்.

இதேபோல தருமபுரி மாவட்டத்தில் நடைபெற உள்ள நகராட்சி, பேரூராட்சி தோ்தல்களில் அதிமுக கூட்டணி வெற்றிபெற கட்சியினா் பாடுபட வேண்டும். மேலும், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை ஏழை, எளியோா், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் பயன்பெறும் வகையில் நலத் திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் தருமபுரி மாவட்டத்தில் கால்நடை ஆராய்ச்சி மையம் தொடங்கியது மற்றும் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது. இதேபோல, தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி பெற்றுதந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சட்டப்பேரவை உறுப்பினா்கள் வே.சம்பத்குமாா் (அரூா்), ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் டி.ஆா்.அன்பழகன், மத்திய கூட்டுறவு வழங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல் உள்ளிட்டோா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com