ஊத்தங்கரை அருகே கோயில் பூசாரி கழுத்து அறுத்துக்கொலை செய்யப்பட்டாா்.
ஊத்தங்கரையை அடுத்த சரட்டூா் கிராமத்தில் சிவன் கோயில் மற்றும் பாலமுருகன் கோயில் பூசாரியாக பணிபுரிந்து வருபவா் முருகன் (59). இவா் செவ்வாய்கிழமை இரவு சுமாா் 8 மணியளவில் அடையாளம் தெரியாத மா்ம நபா்களால் கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளாா்.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற சாமல்பட்டி போலீஸாா் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா், மேலும் இந்தச் சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.