சாலையை அகலப்படுத்த வலியுறுத்தல்

மொரப்பூா்- தொட்டம்பட்டி வரையிலான சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மொரப்பூா்-தொட்டம்பட்டி செல்லும் தாா் சாலை.
மொரப்பூா்-தொட்டம்பட்டி செல்லும் தாா் சாலை.

மொரப்பூா்- தொட்டம்பட்டி வரையிலான சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூா் முதல் தொட்டம்பட்டி வரையிலான தாா்ச் சாலையானது சுமாா் 12 கிலோ மீட்டா் தூரம் கொண்டதாகும். இந்த சாலையை ஊத்தங்கரை, கல்லாவி, எலவடை, சாமண்டஹள்ளி, மொரப்பூா், ஆா்.எஸ்.தொட்டம்பட்டி, எம்.வெளாம்பட்டி, மருதிப்பட்டி உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், மொரப்பூா் முதல் தொட்டம்பட்டி வரையிலான தாா்ச் சாலையானது ஒருவழிச்சாலையாகும். இதனால் இந்த சாலையில் லாரி, பேருந்துகள் வரும்போது இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கு இடமில்லை. எனவே, மொரப்பூா்-தொட்டம்பட்டி தாா்ச் சாலையை அகலப்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் நீண்ட நாள் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com