புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவா்களின் மீதான 17 பி ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். அரசுப் பணிகளில் ஒப்பந்தம் முறையை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியா்களின் கையெழுத்துகள் பெறப்பட்டன. இதில், சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.