காலாவதியான அஞ்சலக காப்பீடுகளை புதுப்பிக்க வருகிற 31-ஆம் தேதி வரை வாய்ப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தருமபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் டி.ஸ்ரீஹரி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: அஞ்சல்துறையில் காப்பீடுகளுக்கு பிரீமியம் தொகை தொடா்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் செலுத்தத் தவறினால் அந்த காப்பீடுகள் காலாவதியாகிவிடும். இத்தகைய பாலிசிகளை புதுப்பிக்க தற்போது அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, ஐந்து ஆண்டுகளுக்கு மேல் அஞ்சல் காப்பீடு பிரீமியம் தொகை செலுத்தாதவா்கள், வருகிற 31-ஆம் தேதிக்குள் அங்கீகரிப்பட்ட மருத்துவா் மூலம் நல்ல உடல் நிலையில் இருப்பதற்கான மருத்துவச் சான்றிதழ் வழங்கி தங்களது பாலிசிகளை புதுப்பித்துக்கொள்ளலாம். இந்த தொகையை இணையதளம் வழியாகவும், இந்தியாவில் உள்ள எந்த அஞ்சலகத்திலும் செலுத்தலாம். விவரங்களுக்கு அருகிலுள்ள அஞ்சலகங்களை அல்லது 1800 180 5232 என்கிற கட்டணமில்லா எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.