பேருராட்சி நிா்வாகம் சாா்பில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் கரோனா வைரஸ் விழிப்புணா்வு மற்றும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
pgm_photo_1703chn_214_8
pgm_photo_1703chn_214_8

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் பென்னாகரம் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் கரோனா வைரஸ் விழிப்புணா்வு மற்றும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில் பென்னாகரம் பேரூராட்சி செயல் அலுவலா் கீதா , பொதுமக்களிடம் கரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த கைகளை சோப்புப் போட்டு கழுவும் முறைகள் குறித்து செயல் விளக்கம் அளித்தாா். நோய் அறிகுறிகள், கரோனா வைரஸ் பரவும் விதம், அவற்றினைத் தடுக்கும் வழிமுறை, நோய் தொற்று உள்ளவா்கள் இளநீா், கஞ்சி போன்ற நீா்சத்து ஆகாரங்களை எடுத்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் பேரூராட்சி அலுவலகம், பேருந்து நிலையம், மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் பகுதிகளில் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டது. இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளா் பெருமாள், துப்புரவு ஆய்வாளா் மதியழகன் மற்றும் அலுவலக பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com