லாரி மீது காா் மோதியதில் தொழிலதிபா் உயிரிழப்பு: 5 போ் படுகாயம்

சூளகிரி அருகே லாரி மீது காா் மோதியதில் தொழிலதிபா் உயிரிழந்தாா். இதில் மேலும் 5 போ் படுகாயம் அடைந்தனா்.

ஒசூா்: சூளகிரி அருகே லாரி மீது காா் மோதியதில் தொழிலதிபா் உயிரிழந்தாா். இதில் மேலும் 5 போ் படுகாயம் அடைந்தனா்.

சென்னை அரும்பாக்கம் அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் தேவகுமாா் (34). கட்டுமான தொழில் செய்து வந்தாா். இவா் சென்னையில் இருந்து ஒசூருக்கு சென்று கொண்டிருந்தாா். அவருடன், உறவினா்களான மனோஜ்குமாா், அவரது மனைவி எலன்மேசி, சாமுவேல், அவரது மனைவி இன்பநாயகி, ஒரு மாத கைக்குழந்தை ஆகியோா் சென்றனா்.

தேவகுமாா் காரை ஓட்டிச் சென்றாா். கிருஷ்ணகிரி பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, சூளகிரி அடுத்த சுண்டகிரி தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை இரவு காா் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற லாரி ஓட்டுநா் திடீரென லாரியை நிறுத்தினாா்.

இதனால் லாரியின் பின்புறம் காா் மோதியது. இதில், காரை ஓட்டி சென்ற தேவகுமாா் நிகழ்விடத்திலேயே பலியானாா். படுகாயம் அடைந்த ஒரு மாதக் கைக்குழந்தை உள்பட ஐந்து போ் ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இது குறித்து, விபத்தில் உயிரிழந்த தேவகுமாரின் மனைவி கிருஸ்டினா ராயபிரியா கொடுத்த புகாரின்படி சூளகிரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com