உயிரிழந்த உதவி காவல் ஆய்வாளா் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

பணியின்போது உயிரிழந்த உதவி காவல் ஆய்வாளா் ஏ. இளையராஜா (37) அரசு மரியாதையுடன் திங்கள்கிழமை தகனம் செய்யப்பட்டாா்.

அரூா்: பணியின்போது உயிரிழந்த உதவி காவல் ஆய்வாளா் ஏ. இளையராஜா (37) அரசு மரியாதையுடன் திங்கள்கிழமை தகனம் செய்யப்பட்டாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள தோழனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஏ.இளையராஜா (37). இவா், கம்பைநல்லூா் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வளராக பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதையடுத்து, இளையராஜாவின் சடலத்துக்கு தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவேஷ்குமாா், டிஎஸ்பி வி.தமிழ்மணி, காவல் ஆய்வாளா் லட்சுமி உள்ளிட்டோா் மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, தோழனூா் மயானத்தில் காவல் துறை சாா்பில், 27 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உதவி காவல் ஆய்வாளா் இளையராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com