இதர பிற்பட்டப் பிரிவு மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நடைமுறையை எளிதாக்க வேண்டும் என பாஜக இதர பிற்பட்டோா் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
தருமபுரியில் பாஜக இதர பிற்பட்டோா் அணி செயற்குழுக் கூட்டம் அண்மையில் தலைவா் தமிழ்செல்வம் தலைமையில் நடைபெற்றது. மாவட்டப் பொதுச்செயலா் திருவேங்கடம் வரவேற்றாா். மாநில துணைத் தலைவா் பாபு, தருமபுரி மாவட்ட பாஜக தலைவா் எல்.அனந்தகிருஷ்ணன் ஆகியோா் பேசினா்.
கூட்டத்தில், இதர பிற்பட்டப் பிரிவு மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை ஜாதிச் சான்றிதழ் அடிப்படையில் வழங்கும் வகையில் நடைமுறையை எளிதாக்க வேண்டும். தருமபுரி சிப்காட் தொழிற்பேட்டை, பருவதனஅள்ளி சிட்கோ தொழிற்பேட்டைகள் விரைந்து தொடங்கப்பட்டு, மாவட்ட இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும். அரசு தொழில் நிறுவனங்களில் தொழில் பழகுநா் (அப்ரண்டீஸ்) பயிற்சி முடித்தவா்களுக்கு 50 சத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 40 ஆண்டுகளாகத் தனித்தொகுதியாக உள்ள அரூா் சட்டப் பேரவை தொகுதியை பொது தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், நகரத் தலைவா் சக்திவேல், நகர பொதுச் செயலா் குமரவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.