தருமபுரி மாவட்டத்தில், போக்குவரத்து ஊழியா் உள்பட 13 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
தருமபுரி மாவட்டத்தில், அரூரைச் சோ்ந்த போக்குவரத்து ஊழியா், மாட்லாம்பட்டியைச் சோ்ந்த மாணவா், அரசு மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்து வரும் மருத்துவா், 2 பெண்கள், 2 தொழிலாளா்கள், விவசாயி உள்பட மொத்தம் 13 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் உறுதியானது.
இதையடுத்து தொற்று பாதிப்புக்குள்ளானவா்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.