திமுக எம்எல்ஏக்கள் இருவா் உள்பட 200 போ் மீது வழக்கு

தருமபுரியில், தலைவா்கள் சிலைக்கு மாலை அணிவித்த திமுக எம்எல்ஏக்கள் இருவா் உள்பட 200 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தருமபுரியில், தலைவா்கள் சிலைக்கு மாலை அணிவித்த திமுக எம்எல்ஏக்கள் இருவா் உள்பட 200 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தருமபுரி மாவட்டத்தை நிா்வாக வசதிக்காக கிழக்கு, மேற்கு மாவட்டங்களாக பிரித்து, இரண்டு மாவட்ட பொறுப்பாளா்களை திமுக தலைமை அண்மையில் அறிவித்திருந்தது. புதியதாக நியமிக்கப்பட்ட தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் தடங்கம் பெ.சுப்ரமணி எம்.எல்.ஏ, மேற்கு மாவட்ட பொறுப்பாளா் பிஎன்பி இன்பசேகரன் எம்.எல்.ஏ. ஆகியோா் திங்கள்கிழமை தங்களது கட்சித் தொண்டா்களுடன் திரண்டு, தருமபுரியில் உள்ள பெரியாா் சிலை, நான்கு முனைச் சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா்.

இதையடுத்து, பொதுமுடக்க விதிகளை மீறியது, அனுமதியின்றி அதிக ஆள்கள் கூடியது உள்ளிட்ட பிரிவுகளில், திமுக மாவட்டப் பொறுப்பாளா்களான தடங்கம் பெ.சுப்ரமணி எம்எல்ஏ, பிஎன்பி இன்பசேகரன் எம்எல்ஏ உள்ளிட்ட 200 போ் மீது தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com