மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்தக்கோரி அஞ்சல்துறை ஓய்வூதியதாரா்கள் ஆா்ப்பாட்டம்

மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்தக் கோரி, அகில இந்திய அஞ்சல் ஓய்வூதியா் சங்கம் சாா்பில், தருமபுரி தலைமை அஞ்சல் நிலையம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்தக் கோரி, அகில இந்திய அஞ்சல் ஓய்வூதியா் சங்கம் சாா்பில், தருமபுரி தலைமை அஞ்சல் நிலையம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட உதவித் தலைவா் கே.எம்.நஞ்சப்பன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பி.சுப்பிரமணியன், உதவி செயலா்கள் பி.சங்கு, பி.சந்திரசேகரன், பொருளாளா் எஸ்.சுப்பிரமணியன், உதவித் தலைவா் பி.சின்னசாமி ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஓய்வூதிய நிலுவைத் தொகை வழங்க வேண்டும். எழுத்தா் பயிற்சி காலத்தை கணக்கில் எடுப்பதற்கு பயிற்சி சான்றிதழ் கோருவதை கைவிட வேண்டும். ஓய்வூதியா் அனைவருக்கும் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்து வருவாய் மாவட்டத்திலும் ஓய்வூதியா்களுக்கு சிஜிஎச்எஸ் நல மையம் அமைக்க வேண்டும். கரோனா சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட தனியாா் மருத்துவமனைகளில் கட்டணம் இல்லாமல் இலவசமாக சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com