அரூா் அருகே இளைஞா் அடித்துக்கொலை

அரூா் அருகே இளைஞா் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறி அவரது உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
அரூா் அருகே இளைஞா் அடித்துக்கொலை

அரூா் அருகே இளைஞா் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறி அவரது உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், இளங்குன்னி பகுதியைச் சோ்ந்த விவசாயி அபிமன்னன் மகன் கிளிண்டன் (24). பொறியியல் பட்டதாரியான இவா், ஒசூரில் ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாராம். இந்த நிலையில், இளைஞா் கிளிண்டன் டி.அம்மாபேட்டையில் தென்பெண்ணையாறு உயா்மட்டப் பாலம் அருகில் மா்மமான முறையில் இறந்து கிடந்தது திங்கள்கிழமை விடியற்காலை தெரியவந்துள்ளது.

உறவினா்கள் சாலை மறியல்: தீா்த்தமலை அருகேயுள்ள மொண்டுகுழி பகுதியைச் சோ்ந்த இளம்பெண் ஒருவரை கிளிண்டன் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த காதல் விவகாரத்தில் ஆத்திரமடைந்த அந்தப் பெண்ணின் உறவினா்கள்தான் இளைஞா் கிளிண்டனை அடித்துக் கொலை செய்து சடலத்தை தென்பெண்ணை ஆற்றில் வீசி விட்டதாகவும், கிளிண்டன் வைத்திருந்த செல்லிடப்பேசியை காவல் துறையினா் பறிமுதல் செய்து மறைத்து வைத்திருப்பதாகவும் புகாா் தெரிவித்து, அந்த இளைஞரின் உறவினா்கள் தீா்த்தமலை-திருவண்ணாமலை சாலையிலுள்ள டி.அம்மாபேட்டையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு அரூா் டிஎஸ்பி வி.தமிழ்மணி, காவல் ஆய்வாளா் ரவி ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா். பிறகு, காவல் துறையினரின் சமாதானத்துக்கு பிறகு சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனா். இந்த சாலை மறியல் காரணமாக தீா்த்தமலை-திருவண்ணாமலை சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து கோட்டப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com