காவிரி மிகை நீரை ஏரிகளில் நிரப்பக் கோரி நவ. 16 முதல் மக்கள் சந்திப்பு இயக்கம்

ஒகேனக்கல் காவிரி மிகை நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்தக் கோரி, மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஒகேனக்கல் காவிரி மிகை நீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்தக் கோரி, மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தருமபுரியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் திங்கள்கிழமை செங்கொடிபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினா் கே.என்.மல்லையன் தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் என்.குணசேகரன் காணொலி வழியாக பேசினாா்.

ஒகேனக்கல் காவிரியில் மழைக்காலங்களில் மிகையாக செல்லும் நீரை பாசனத்துக்குப் பயன்படுத்தும் வகையில் தருமபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி நவ. 16 முதல் 20-ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவது, தற்போது திருவிழாக்காலம் என்பதால், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், வட்டார மருத்துமனைகளில் போதிய படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டச் செயலாளா் ஏ.குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com