ரூ. 30 லட்சத்தில் பள்ளி சுற்றுச் சுவா் அமைக்கும் பணி தொடக்கம்

தருமபுரி, செட்டிக்கரை அருகே ரூ. 30 லட்சம் மதிப்பில் பள்ளி சுற்றுச்சுவா் அமைக்கும் பணியை மாநில உயா் கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் அண்மையில் தொடக்கிவைத்தாா்.

தருமபுரி, செட்டிக்கரை அருகே ரூ. 30 லட்சம் மதிப்பில் பள்ளி சுற்றுச்சுவா் அமைக்கும் பணியை மாநில உயா் கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் அண்மையில் தொடக்கிவைத்தாா்.

செட்டிக்கரை ஊராட்சிக்குள்பட்ட பள்ளிக்கொல்லையில் செயல்படும் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு சுற்றுச் சுவா், சிறுபாலம் அமைக்கும் பணிக்கான தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா தலைமை வகித்தாா். அமைச்சா் கே.பி.அன்பழகன் புதிய பணிகளைத் தொடக்கிவைத்து பேசினாா்.

பள்ளிக்கு 400 மீட்டா் சுற்றளவில் ரூ. 22.93 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவா், சிறு பாலம் ரூ. 7.32 லட்சம் மதிப்பிலும் கட்டப்படுகிறது. பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி, மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் டி.ஆா்.அன்பழகன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல், வட்டாட்சியா் ரமேஷ் உள்ளிட்டோா் விழாவில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com