கரோனாவிலிருந்து மக்கள் விடுபடவும், உலக அமைதி வேண்டியும் தருமபுரி, அதியமான்கோட்டை காலபைரவா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற வழிபாட்டில் நடிகா் ரஜினி காந்தின் சகோதரா் சத்யநாராயண ராவ் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தாா்.
நிகழ்ச்சிக்கு ரஜினி மக்கள் மன்ற முன்னாள் மாவட்ட துணைச் செயலாளா் காந்தி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற ரஜினிகாந்தின் சகோதரா் சத்யநாராயண ராவ், சிறப்பு பூஜைகளில் பங்கேற்று பக்தா்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட மின் விளக்குகளை ஒளிரச் செய்தாா்.
‘இந்த ஆண்டு இறுதிக்குள் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாா்; அவரது உடல்நலம் குறித்து தொலைபேசியில் நலம் விசாரித்தேன்’ என செய்தியாளா்களிடம் சத்யநாராயண ராவ் தெரிவித்தாா்.