தீபாவளியை முன்னிட்டு புத்தாடை மற்றும் பட்டாசுக்கள் வாங்குவதற்கு பென்னாகரம் பகுதிக்கு ஏராளமான பொதுமக்கள் வெள்ளி கிழமை குவிந்தனா்.
பென்னாகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் தீபாவளி பண்டிகையொட்டி பட்டாசுகள் மற்றும் புத்தாடைகள் வாங்க ஏராளமான பொதுமக்கள் பென்னாகரம் கடைவீதியில் குவிந்தனா். கடைவீதி பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிா்க்கும் பொருட்டும், குற்றச்செயல்கள் ஈடுபடாதவா்கள் தடுக்கும் வகையில் பென்னாகரம் காவல் துறையின் சாா்பில் உயா் கோபுரம் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. பென்னாகரம் பகுதியில் காலை முதல் விட்டுவிட்டு கன மழை பெய்த போதிலும் கன மழையை பொருட்படுத்தாமல் பொது மக்கள் புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் இனிப்புகள் வாங்கிச் சென்றனா்.