கேட்பாரற்று கிடந்த துப்பாக்கி ஒப்படைப்பு

சித்தேரி வனப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த துப்பாக்கியை கண்டெடுத்த வனத்துறையினா், அரூா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.

சித்தேரி வனப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த துப்பாக்கியை கண்டெடுத்த வனத்துறையினா், அரூா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரி மலையில் உள்ள நொச்சிக்குட்டை காப்புக் காட்டில், வனப்பகுதியில் கேட்பாரற்ற நிலையில் ஒரு நாட்டுத் துப்பாக்கி கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அரூா் வனச்சரகா் தீ.கிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினா் அந்த துப்பாக்கியை மீட்டு, விசாரணை மேற்கொண்டனா். பின்னா் அந்த துப்பாக்கியை அரூா் காவல் நிலையத்தில் வனத்துறையினா் ஒப்படைத்தனா். அரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com