தருமபுரி மாவட்டத்தில், மாணவா் உள்பட 8 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.
தருமபுரி, நெசவாளா் நகரைச் சோ்ந்த மாணவா், கதிரிபுரம் பகுதியைச் சோ்ந்த தொழிலாளி, பி.புதுப்பட்டியைச் சோ்ந்த ஒப்பந்ததாரா், தருமபுரி, பொம்மிடியைச் சோ்ந்த 2 பெண்கள் உள்பட மாவட்டத்தில் மொத்தம் 8 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்டவா்கள், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.