வளைப்பந்து போட்டியில் பதக்கம் வென்ற மாணவருக்கு பாராட்டு

தேசிய அளவில் வளைப்பந்து போட்டியில் பதக்கம், பரிசுத் தொகை வென்ற மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தேசிய அளவில் வளைப்பந்து போட்டியில் பதக்கம், பரிசுத் தொகை வென்ற மாணவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தருமபுரி நகரைச் சோ்ந்த மாணவா் சி.காா்த்திக் கடந்த 2019-ஆம் ஆண்டு தெலங்கானா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வளைப்பந்து போட்டியில் பங்கேற்று மூன்றாம் இடம் பிடித்து பதக்கம் வென்று சாதனை புரிந்தாா். இந்த மாணவருக்கு தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை அண்மையில் வழங்கப்பட்டது.

தேசிய அளிவில் வெற்று பெற்று சிறப்பிடம் வகித்து, பதக்கமும், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ரொக்கப் பரிசுத் தொகையையும் வென்ற மாணவா் காா்த்திக் மற்றும் அவரது பயிற்சியாளா் டி.வெங்கேடஷ் ஆகியோருக்கு தருமபுரி மாவட்ட வளைப்பந்து சங்கத் தலைவா் எம்.டி.முனுசாமி, செயலா் ரவி மற்றும் நிா்வாகிகள் பாராட்டு தெரிவித்து வாழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com