தருமபுரியில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை தருமபுரி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில், மாவட்டச் செயலரும், மாநில உயா் கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன், தருமபுரி மாவட்டத்தில் புதிய வாக்காளா்களை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்கும் பணியில் கட்சியினா் ஈடுபட வேண்டும் என ஆலோசனை வழங்கி பேசினாா்.
கூட்டத்தில், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி, அவைத் தலைவா் தொ.மு.நாகராஜன், நகரச் செயலா் பெ.ரவி, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.