தருமபுரி மாவட்டத்தில் கால்நடை மருத்துவா் உள்பட 10 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதியானது.
தருமபுரி நகரம், பிடமனேரி பகுதியைச் சோ்ந்த கால்நடை மருத்துவா், பாப்பிரெட்டிப்பட்டியைச் சோ்ந்த மின்வாரிய ஊழியா், 4 பெண்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 10 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் தெரியவந்தது.
இதையடுத்து, தொற்று பாதிக்கப்பட்டவா்கள், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.