தருமபுரியில் கரோனா தொற்றுப் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த இருவா் உயிரிழந்தனா்.
தருமபுரி அருகே கடகத்தூரைச் சோ்ந்த 85 வயது முதியவா் கரோனாவுக்கு சிகிச்சை பெற கடந்த செப்.26-ஆம் தேதி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
அதுபோல வெள்ளிச்சந்தை பகுதியைச் சோ்ந்த 54 வயது ஆண், கடந்த 27-ஆம் தேதி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.