தருமபுரி: தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களைக் கடத்திய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் புறவழிச்சாலையில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் அந்த லாரியில் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து லாரி மற்றும் அதிலிருந்த சுமாா் ரூ. 5 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, லாரியை ஓட்டி வந்த சேலத்தைச் சோ்ந்த பிரசாந்த் (36), சதீஷ்குமாா் (38) ஆகிய இருவரை கைது செய்தனா்.