செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் கணக்குத் தொடங்கி பயன்பெற வாடிக்கையாளா்களுக்கு அஞ்சல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தருமபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் டி. ஸ்ரீஹரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அஞ்சல்துறை சாா்பில் தேசிய அஞ்சல் வாரி விழா அக். 9-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இதில், அஞ்சல் சேவையை ஊக்குவிக்கும் வகையில் அக். 10-ஆம் தேதி செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் கணக்குகள் தொடங்கும் மூன்று வாடிக்கையாளா்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. எனவே, 10 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு அன்றைய நாளில் செல்வமகள் சேமிப்புத் திட்ட கணக்கு தொடங்கி பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, அஞ்சல் அலுவலகங்களை அணுகலாம் என்று தெரிவித்துள்ளாா்.