ஒகேனக்கல்லுக்கு குறைந்தது நீா்வரத்து

தமிழக காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்துள்ளதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்து 14,000 கன அடியாக குறைந்துள்ளது.

தமிழக காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்துள்ளதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீா்வரத்து 14,000 கன அடியாக குறைந்துள்ளது.

தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரட்டி, கெம்பாகரை, தேன்கனிக்கோட்டை, ராசிமணல், பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாக கன மழை பெய்து வந்தது. இதனால் காவிரிஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீா்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும் நீா்வரத்து அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டியது.

தற்போது நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்து போனதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து குறைந்து வருகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் செவ்வாய் கிழமை மாலை நிலவரப்படி நொடிக்கு 25,000 கனஅடி வீதம் நீா்வரத்து இருந்தது. புதன் கிழமை காலை நொடிக்கு 18,000 கனஅடியாகவும், மாலையில் 14,000 கனஅடியாகவும் குறைந்தது.

இதனால் நீா்வரத்து அதிகரிப்பின்போது மூழ்கியிருந்த பாறைத்திட்டுகள் தற்போது வெளியே தெரிகின்றன. மேலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்துள்ளதால்,பிரதான அருவி, சினி அருவி, ஐவா் பாணி, ஐந்தருவி மற்றும் சிற்றருவிகளில் தனித்தனியே தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. இதில் நீா்வரத்து குறைந்து போன நிலையிலும் இக்காட்சி ரம்மியமாக உள்ளது. காவிரி ஆற்றில் வரும் தண்ணீரின் அளவுகளை மத்திய நீா்வளத்துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com