தருமபுரி மாவட்டத்தில், ஊராட்சி மன்றச் செயலா்கள் இருவா் உள்பட 61 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதியானது.
தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த ஊராட்சிச் செயலா்கள் இருவா், கோழிமேக்கனூரைச் சோ்ந்த டாஸ்மாக் ஊழியா், தருமபுரி கூட்டுறவு வங்கி ஊழியா்கள் இருவா், கெரகோடஅள்ளியைச் சோ்ந்த போக்குவரத்து ஊழியா், நடுப்பட்டியைச் சோ்ந்த காவலா், 14 பெண்கள், 7 மாணவா்கள், 2 தொழிலாளா்கள், 3 விவசாயிகள் உள்பட மாவட்டத்தில் மொத்தம் 61 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, தொற்று பாதிப்புக்குள்ளான அனைவரும், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.