ஏரியூா் ஊராட்சிக்குள்பட்ட 10 ஊராட்சி மன்றச் செயலா்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு கேட்டு வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் முன்பு வியாழன் கிழமை போராட்டம் நடத்தினா்.
தமிழ்நாடு ஊராட்சி செயலாளா்கள் சங்கத்தின் சாா்பில் மாநிலம் தழுவிய ஒரு நாள் தற்செயல் விடுப்பு கவனஈா்ப்பு போராட்டம் ஏரியூா் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.
இதற்கு சுஞ்சல் நத்தம் ஊராட்சி செயலா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். ஏரியூா் ஊராட்சிக்குள்பட்ட சுஞ்சல்நத்தம், கோடி அள்ளி, அஜ்ஜனஅள்ளி, ராமகொண்ட அள்ளி, தொன்ன குட்டஅள்ளி, மஞ்சார அள்ளி, கெண்டையன அள்ளி, பத்ர அள்ளி, நாகமரை, பெரும்பாலை உள்ளிட்ட 10 ஊராட்சி மன்றங்களின் செயலா்கள், ஏரியூா் வட்டார வளா்ச்சி துணை அலுவலா் பழனியிடம் , வெள்ளிக்கிழமை ஒருநாள் விடுப்பு கேட்டு அதற்கான விடுப்பு விண்ணப்பத்தினை அளித்தனா்.
இதனைத் தொடா்ந்து வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் நுழைவாயில் அருகே போராட்டம் தொடா்பான பதாகைகளை ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.