தருமபுரி அருகே நூலஅள்ளியில் ரூ. 24.13 லட்சம் மதிப்பில் பள்ளிக் கட்டடம் கட்டும் பணியை அமைச்சா் கே.பி.அன்பழகன் தொடக்கிவைத்தாா்.
தருமபுரி மாவட்டம், நூலஅள்ளியில் பள்ளிக் கட்டடம் கட்டுமானப் பணிகள் தொடக்கம், புதிய மின் வாரிய அலுவலகம் திறப்பு, சாலை மேம்பாட்டுப் பணிகளைத் தொடக்கிவைக்கும் விழா ஊரக வளா்ச்சி திட்ட இயக்குநா் க.ஆா்த்தி தலைமையில் நடைபெற்றது.
விழாவில் நூலஅள்ளி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு ரூ. 24.13 லட்சத்தில் 2 புதிய கூடுதல் வகுப்பறை கட்டடம், மின் வாரிய அலுவலக கட்டத்தைத் திறந்துவைத்து, ரூ. 19.22 லட்சம் மதிப்பிலான தாா்ச்சாலை மேம்பாட்டு பணியை அமைச்சா் கே.பி.அன்பழகன் தொடக்கிவைத்து பேசினாா்.
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி, கோட்டாட்சியா் (பொ) தணிகாசலம், மின் வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் பன்னீா்செல்வம், பொறியாளா் இந்திரா, வட்டாட்சியா் ரமேஷ், தருமபுரி ஒன்றியக் குழுத் தலைவா் செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.