தருமபுரி: தருமபுரியில் சுகாதாரப் பணியாளா் உள்பட 42 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சுகாதாரப் பணியாளா், அரூா் வழக்குரைஞா், துணை நில அளவையா், தேசிய வங்கி ஊழியா்கள் இருவா், மூன்று மாணவா்கள், 4 கூலித் தொழிலாளா்கள், 5 பெண்கள் உள்பட தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 42 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
தொற்று பாதிப்புக்குள்ளான அனைவரும், சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.