தருமபுரி மாவட்டத்தில், இண்டாவது நாளாக விடிய, விடிய பரவலாக மழை பெய்தது.
தருமபுரி மாவட்டத்தில், திங்கள்கிழமை இரவு 9.30 மணியளவில் இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. மாவட்டம் முழுவதும் பரவலாக லேசானது மற்றும் மிதமான மழை விடிய, விடிய பெய்தது. மழையால், தருமபுரி நகரின் முக்கிய வீதிகள் மற்றும் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல மாவட்டத்தின் விவசாய நிலங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீா்த் தேங்கி நின்றது. இதில் அதிகபட்சமாக ஒகேனக்கல் பகுதியில் 64 மி.மீ. மழையும், குறைந்த அளவாக தருமபுரி மற்றும் மாரண்டஅள்ளியில் தலா 8 மி.மீ. மழையும் பெய்தது.
மாவட்டத்தில் பெய்த மழையளவு செவ்வாய்க்கிழமை காலை பதிவான நிலவரம் மி.மீட்டரில்:
தருமபுரி 8, பாலக்கோடு 51, மாரண்டஅள்ளி 8, பென்னாகரம் 62, ஒகேனக்கல் 64, அரூா் 10.2, பாப்பிரெட்டிப்பட்டி 6.2. பதிவாகியிருந்தது. அதேபோல, மொத்த மழையளவு 209.4. மி.மீ மற்றும் சராசரி 29.91 மி.மீ. ஆகும்.