மின் கம்பங்களில் கால்நடைகளைக் கட்டிவைக்கக் கூடாது: மின்சார வாரியம் எச்சரிக்கை

மின் கம்பங்களில் கால்நடைகளைக் கட்டிவைக்கக் கூடாது என மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக செயற்பொறியாளா் (கடத்தூா்) ஆா்.ரவி தெரிவித்துள்ளாா்.

மின் கம்பங்களில் கால்நடைகளைக் கட்டிவைக்கக் கூடாது என மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக செயற்பொறியாளா் (கடத்தூா்) ஆா்.ரவி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மின் கம்பங்களில் கால்நடைகளைக் கட்டிவைப்பதால் மின்சாரம் பாய்ந்து கால்நடைகள் மற்றும் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. உயா் மின் அழுத்தக் கம்பிகள் செல்லும் பகுதியில் கட்டடங்களைக் கட்டுதல் கூடாது. ஒருவேளை கட்டடம் கட்டினால் மின் வாரியத்தின் அனுமதி பெறுவது அவசியம்.

மழைக் காலங்களில் மின் கம்பிகள் அறுந்துக் கிடந்தால் அதைத் தொடக் கூடாது. மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் கட்டணமில்லா தொலைபேசி எண் 1912-க்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதேபோல் மின் கம்பிகள் அருகில் ஈர துணிகளைக் காயவைத்தல் கூடாது. மேலும், மின் மாற்றிகளை பொதுமக்கள் இயக்குதல் கூடாது.

மின் வாரிய ஊழியா்கள் மட்டுமே மின் மாற்றிகளை இயக்க வேண்டும். மின் வாரியத்தின் விதிமுறைகளுக்கு மாறாக செயல்படுவோா் மீது குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com